சிங்கப்பூரிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 3 பயணிகளை தீவிர சோதனை செய்தபோது அவர்கள் கொண்டு வந்த லேப்டாப்பில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எடை போட்டு பார்த்த போது 390 கிராம் இருந்தது. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.26 லட்சம் ஆகும். தங்கத்தை கடத்தி வந்த 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.*
Comments are closed.