Rock Fort Times
Online News

திருச்சியில் உரிமமின்றி இயங்கிய நிறுவனத்தில் தயாரான 25,000 லிட்டர் தண்ணீர் பறிமுதல்

காவல் துறையில் வழக்குப் பதியவும் பரிந்துரை

திருச்சி, வயலூர் சாலை சோமரசம் பேட்டையில் உரிமமின்றி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வந்தது. தகவலறிந்த திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலர்கள் அந்த நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் உரிமமின்றி நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நிறுவனத்தில் தண்ணீர் உற்பத்தி செய்யக்கூடாது என தாற்காலிகதடை விதித்து மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அந்த நிறுவனத்தில் தடையை மீறி மீண்டும் முறைகேடாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தி நடந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சனிக்கிழமை அந்த நிறுனவனத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 25,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தி செய்து பாட்டில்கள் மற்றும் கேன்களில் அடைத்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு , சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவன உரிமையாளர் மீது, தடை உத்தரவை மீறி மீண்டும், செயல்பட்டமைக்காக குற்ற வழக்கு பதிவு செய்யவும், திருச்சி உறையூர் காவல் நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்