அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் திருட்டு- கிளை மேலாளர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்…!
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கோட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. இந்த கோட்டத்தில் தாமிரபரணி கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை திருநெல்வேலியில் உள்ளது. இந்த பணிமனையில் இருந்து 56 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த பணிமனையில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் டீசல் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த போக்குவரத்து கழக பணிமனையில் தினசரி அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் ஆகியுள்ளது.
இதுதொடர்பாக பணிமனை கிளை மேலாளர் கிருஷ்ணன்
உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
*
Comments are closed.