Rock Fort Times
Online News

புதுக்கோட்டை அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 20 பயணிகள் படுகாயம்…!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து கீரனூர் நோக்கி சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து இன்று( மார்ச் 20) காலை சென்று கொண்டிருந்தது. ஆவாரங்குடிபட்டி அருகே பேருந்து சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்