திருச்சி, லால்குடி அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்த போது கதண்டுகள் பறந்து வந்து கடித்ததில் 20 பக்தர்கள் காயம்…!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெடுஞ்சாலைக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்து கோவிலை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் இடையே வெடி வெடித்த போது அதன் சத்தத்தில், அங்கு மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் பறந்து வந்து பக்தர்களை கடித்தன. இதில், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் வலியால் துடித்தனர்.அவர்கள் அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவில் பக்தர்களை கதண்டுகள் கடித்த சம்பவம் கிராம பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments are closed.