திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 55). சம்பவத்தன்று இவர் சிங்காரத்தோப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி பெரிய கடைவீதி சமஸ்பிரான் தெருவை சேர்ந்த சீனிவாசன் ( 28), கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இதேபோல, திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த சகாய சார்லஸ் ( 36) சம்பவத்தன்று பீமநகர் பகுதியில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் (22)என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.800 பறித்துச் சென்றார். இதுகுறித்து சகாய சார்லஸ் பாலக்கரை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருபாகரனை கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.