திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது மகன் விவேக் (வயது 34), பெயிண்டர். இவரது நண்பர் பால்ராஜ் ( 35). சீதாலட்சுமிக்கு புத்தூர் பெரியார் நகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. சம்பவத்தன்று அந்த வீட்டில் விவேக், பால்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பிறகு அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். சம்பவத்தன்று விவேக், பால்ராஜ் இருவரும் உறையூர் வார்டு அலுவலகம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த சபரி, சந்தோஷ், ஆரிஃப், வேணு ஆகியோர் விவேக் மற்றும் பால்ராஜிடம் தகராறு செய்ததோடு அவர்கள் இரண்டு பேரையும் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டனர். இதில், காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலையத்தில் சீதாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், சபரி, சந்தோஷ், ஆரிஃப், வேணு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.