திருச்சி மாநகர கொடுங்குற்றம் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி சீனிவாச நகரை சேர்ந்த சீனிவாச ரத்தினம், தருமபுரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ₹ 2.20 லட்சம் ஆகும். இவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.