Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் 22 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது…

திருச்சி மாநகர கொடுங்குற்றம் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி சீனிவாச நகரை சேர்ந்த சீனிவாச ரத்தினம், தருமபுரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ₹ 2.20 லட்சம் ஆகும். இவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்