திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கே.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது சிறப்பு முகாம் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அந்த செல்போன்கள் யாருடையது? , சிறை வளாகத்துக்குள் வந்தது எப்படி?, யார் பயன்படுத்தியது என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.