திருச்சியில் 182 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 கடைகளுக்கு ‘சீல்’ …
அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் மார்க்கெட் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த மொத்த விற்பனையாளர் திருவானைக்காவலை சேர்ந்த குமார் என்பவரின் கணபதி ஸ்டோரில் 2.8 கிலோ, ஸ்ரீரங்ம் ராஜகோபுரம் அருகில் உள்ள ஒரு பீடா ஸ்டாலில் சுமார் 7 கிலோ, தில்லைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ராமச்சந்திரன் என்ற நபரிடம் 163 கிலோ புகையிலை பொருட்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் திருச்சி மாநகர பகுதிகளில் 182 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடா்பாக மேல் நடவடிக்கைக்காக ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், தில்லைநகர் காவல் நிலையங்களில் 5 நபா்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.