மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா இன்று ( 02.10.2023 ) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கு மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், தலைமை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள காந்தியடிகள் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன் ,மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.