Rock Fort Times
Online News

தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,190 சிறப்பு பஸ்கள் இயக்கம்…!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம்  மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்
கழகம் முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து  அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,  சுதந்திர தினம் மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு நாளை(14-08-2024) புதன்கிழமை சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு 470 பேருந்துகளும்,  ஆகஸ்ட் 16ம் தேதி  வெள்ளிக்கிழமை  மற்றும் ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 70 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை 65 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மற்றும் பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மேலும் , ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்