திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், இனாம் ரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் ராஜரத்தினம். அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். இவா்களது மகள் மணிமேகலை ( வயது 15) . முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை ராஜரத்தினம் திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் மணிமேகலைக்கும், அவரது சித்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த மணிமேகலை நேற்று ( 24.10.2023 ) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.