தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் 1,000 ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தத் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனி ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி இன்று(10-1-2024) தொடங்கி வைத்தார். 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். இத்திட்டத்திற்காக ரூ.2,436 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.