திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு, சமயபுரம் அருகே உள்ள சிறுகனூரில் நாளை (மார்ச் 9) திமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வருகிற கட்சியினருக்கு பார்க்கிங் மற்றும் வழிப்பாதை தொடர்பான சந்தேகங்களுக்கு உதவ திருச்சி மண்டல திமுக ஐ.டி விங் சார்பில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments are closed.