சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைத்தும் வெளிவருவதில் சிக்கல்…!
தமிழ்நாடு பெண் போலீஸாரை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்ட சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெலிக்ஸ் ஜெரால்டு, ஜாமீன் கேட்டு திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, அடுத்த 6 மாதங்களுக்கு 1 மற்றும் 15-ம் தேதிகளில் திருச்சி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எனினும், கோவை காவல் நிலையத்திலும் அவர் மீது வழக்கு இருப்பதால், பெலிக்ஸ் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Comments are closed.