காமம் கண்ணை மறைத்தது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக 2 குழந்தைகளை கொன்ற தாய்- கள்ளக்காதலனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…!
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் ( வயது 30). இவரது மனைவி அபிராமி(25). இந்த தம்பதிக்கு அஜய்( 6) என்ற மகனும், கார்னிகா(4) என்ற மகளும் இருந்தனர். அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சிசுந்தரம் (25) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, நீண்ட நாட்களாக பழகி வந்தனர். கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதிய அபிராமி, மகன்- மகளை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்தார். உண்மை வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அபிராமி, அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்தை குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடி வந்தார். விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று (ஜூலை 24) நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில், தாய் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.