Rock Fort Times
Online News

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள சேசசமுத்திரம் மேலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 35). வெல்டர். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று வாளாடி அருகே தத்தனூரில் உள்ள ஒருவர் வீட்டில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்