Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் கட்டிட பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி- இன்ஜினியர் உட்பட 2 பேர் மீது வழக்கு…!

திருச்சி, சோமரசம்பேட்டையை அடுத்த அதவத்தூரை சேர்ந்தவர் கந்தன் (வயது65), கட்டிட தொழிலாளியான இவர் ஸ்ரீரங்கம் அம்மாமண்டப சாலை அருகே கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் 8 அடி உயரமுள்ள சுவர் இடிந்து இவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் கட்டிட இன்ஜினியர் உட்பட2 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்