Rock Fort Times
Online News

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொாிதல் விழா.

திருச்சி உறையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டிற்க்கான பூச்சொரிதல் விழா வருகிற 17-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. முதலில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றியபின் , சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்