திருச்சி பீமநகர் நடு ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 35). இவர் அந்தப் பகுதியில் உள்ள பெண்களை சேர்த்து மகளிர் சுய உதவி குழு நடத்தி வந்தார். மேலும், அந்த குழுவுக்கு அவர் தலைவியாகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் அவருடைய குழு உறுப்பினர்கள் சிலர் கடன் வாங்கிவிட்டு பணத்தை முறையாக திருப்பி செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியில் இருந்த பரமேஸ்வரி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து கொண்டார். சிறிது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவி பரமேஸ்வரி பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரோ வாங்கிய கடனுக்காக பரமேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT…👇
Comments are closed.