Rock Fort Times
Online News

தகாத உறவால் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய பெண்….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாடக்குடி பகுதியில் உள்ள வ.உ.சி.நகரை சேர்ந்தவர் பஷீர். இவரது மனைவி பாத்திமா ( வயது 43). இவருக்கும், இனாம் சமயபுரம் முத்துராஜா தெருவை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தந்தையான குமரன் (31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் பாத்திமா தனது கணவரை விட்டு பிரிந்து குமரனுடன் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த பாத்திமா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாத்திமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து குமரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்