ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கஞ்சிரங்குடி டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 52). இவர் மேற்கண்ட முகவரியில் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை பஞ்சவர்ணம் என மாற்றிக் கொண்டு போலி பாஸ்போர்ட் பெற்றதாக கூறப்படுகிறது. அதன்மூலம் திருச்சியில் இருந்து தனியார் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றார். அப்போது அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் ஆய்வு செய்தார். அப்போது அவர் போலி பாஸ்போர்ட் பெற்றிருந்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.