Rock Fort Times
Online News

‘துரோகி’ பட்டம் சுமத்துவதா? வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்…!

மதிமுக துணை பொதுச் செயலாளராக உள்ள மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்தநிலையில், வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையும், அன்றைய தினம் காலை 10 மணி முதல் 5 மணி வரையில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் வகையில் `துரோகி’ என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டிய மல்லை சத்யா, நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்