சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்தது. கைது செய்யப்பட்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம். ஜெயச்சந்திரன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19ம் தேதி உத்தரவிட்டார். அன்றைய தினமே செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை(30-10-2023) விசாரணைக்கு வர உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது நாளைய தினம் தெரியவரும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.