Rock Fort Times
Online News

“நீட்” தேர்வை ரத்து செய்ய 60 லட்சம் பேரிடம் திமுக வாங்கிய கையெழுத்து என்ன ஆனது?- சீமான் கேள்வி…!

அயோத்தி தாச பண்டிதர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சானிடோரியம் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பலமுறை நீட் தேர்வை கண்டித்து பேசி இருக்கிறேன். மாநில சுயாட்சி நாயகர் என பாராட்டு விழா எடுப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நீட் சிறப்பு பயிற்சி என்கிற பேரில் பலகோடி சம்பாதிக்கிறார்கள். நீட் தேர்வை அமெரிக்க தனியார் நிறுவனம் நடத்துகிறது. இதன்மூலம் சிற்றூரில் இருக்கும் மாணவருக்கு டாக்டர் படிப்பு என்பது கனவாகவே போய்விடும். நீட் தேர்வால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் எப்படி இந்த முறையை கொண்டு வந்தார்கள். அன்று நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தபோது எப்படி திமுக ஆதரித்தது. சரி, இன்று நீட் தேர்வை ரத்து செய்ய 60 லட்சம் பேரிடம் கையொப்பம் வாங்கி என்ன செய்தீர்கள்?, அதை எங்கு கொடுத்தீர்கள்?. ஆடைகள் கட்டுப்பாடு எந்த மாநிலத்தில் இப்படி உள்ளது? மூக்குத்தி, தோடு போன்றவற்றில் பிட் எடுத்துக் கொண்டு போய் தேர்வெழுதுவார்களா? வட இந்தியாவில் இதே நீட் தேர்வை புத்தகம் வைத்து எழுதுகிறார்கள். நான் வீடியோ தருகிறேன்… வெளியிடுங்கள். பொத்தானில் பிட் வைக்க முடியுமா? அதை ஏன் அகற்ற சொல்கிறீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்கின்றனர்… ஆனால் ஓட்டு போடும் பெட்டியில் ஏதும் நடக்காது என்கின்றனர். இதை நம்ப வேண்டுமா நாங்கள்? என் பிள்ளைகளை அழவைத்து தேர்வு வைக்கிறீர்கள்… என்ன மன நிலையில் அவர்கள் தேர்வு எழுதுவார்கள்?ஒரு நாள் நிச்சயம் இதை மாற்றுவேன். விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்கிறார்கள். பஹல்காம், புல்வாமாவில் தாக்குகிறான். அங்கு சோதிக்கவில்லையா? ஸ்டாலின் என்றால் சாதனையா? சாதனை ஒன்றுமே இல்லாத ஆட்சியை இத்தனை ஆண்டு நடத்தினால் அது சாதனைதானே. பிரதமர், முதலமைச்சர் என எல்லோரும் தேர்வெழுத வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் அமைச்சர்களாகட்டும். நம் கல்வி முறையே தவறாக இருக்கு” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்