ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பகல்பத்து நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராப்பத்து உற்சவத்தையொட்டி நேற்று மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை நடந்தது. ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று (ஜன.6) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு வையாளி வகையறா கண்டருளினார். இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு உபயதாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திரு மாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் 10ம் நாளான 8ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 9ம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Comments are closed.