சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கி வருகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று ( 20.11.2023 ) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக யஸ்வந்த்பூரில் இருந்து நாளை ( 21.11.2023 ) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.