Rock Fort Times
Online News

சென்னை- பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்….

முதல் முறையாக இரவு நேரத்தில் இயக்கம்..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கி வருகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று ( 20.11.2023 ) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக யஸ்வந்த்பூரில் இருந்து நாளை ( 21.11.2023 ) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்