Rock Fort Times
Online News

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்து – 6 பேர் படுகாயம். (வீடியோ இணைப்பு)

திருச்சி, சுப்பிரமணியபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் குடும்ப திருமண நிகழ்ச்சி, இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற இருந்தது.இதில் மணமக்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் மூன்று வேனில் சென்றுள்ளனர. இதில் மூன்றாவதாக சென்ற வேனானது, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவானைக்கோவில் மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. வந்த வேகத்தில் சாலையின் சென்டர் மீடியினில் மோதி வேன் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வேன் ஓட்டுனரான ஹரி கிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்காக சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்