மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகை: நாளை (பிப்.13) மற்றும் 14ம் தேதி டிரோன்கள் பறக்கத் தடை…!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நாளை(13-02-2026) திருச்சி வருகிறார். ஆகவே, பாதுகாப்பு காரணம் கருதி நாளை (13.02.2026) மற்றும் நாளை மறுநாள் (14.02.2026) ஆகிய 2 நாட்கள் திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி\ வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.