திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 58-க்குட்பட்ட கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் மக்கள் மன்றத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (அக். 30) நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும், முகாமின் செயல்பாடுகளையும் அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், முகாமில் தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு அதற்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், உதவி ஆணையர் சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.