திருச்சி மாநகராட்சி 10, 11-வது வார்டில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்”- மாவட்ட கலெக்டர், மேயர் பார்வையிட்டு ஆய்வு…!
திருச்சி மாநகராட்சி 10 மற்றும் 11-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” நடைபெற்றது. உறையூர் நெசவாளர் திருமண மண்டபம் மற்றும் கீரைக்கொல்லை தெரு மைதானத்தில் நடைபெற்ற இந்த முகாம்களில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும், முகாமின் செயல்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இந்த முகாம்களில் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.