தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா வருகிற அக்டோபரில் ஓய்வுபெற உள்ளதை அடுத்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலாளர் பதவிக்கு, முதல்வரின் செயலாளர் நிலை 1-ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். நேற்று தலைமைச் செயலகம் வந்த நா.முருகானந்தம், தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 2001-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த உமாநாத், 2010-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். அதன்பிறகு பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர் தற்போது முதல்- அமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.