பொதுத்தேர்வு நேரத்தில் தந்தையை இழந்த போதிலும் மன உறுதியோடு தேர்வு எழுதி சாதனை படைத்த மாணவிகளை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்…!
திருச்சி மாவட்டம், கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றவர் மாணவி பி.சத்யபிரியா. பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை காலமானார். தந்தை மறைவெய்திய நிலையிலும் மனஉறுதியோடு தேர்வினை எழுதி 600 க்கு 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதேபோல திருவெறும்பூர், தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த மாணவி ஷாலினியும் பொதுத்தேர்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து தேர்வெழுதி சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். அந்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக திருச்சிக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த மாணவிகளை அழைத்து பாராட்டியதோடு கல்வி நிதியுதவியை வழங்கினார். இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.