Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமாக அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் மிளகு பாறையை சேர்ந்த பாலமுருகன் (வயது 45), கணேஷ் (42) என்பதும், அவர்கள்தான் ஆட்டோவை திருடி ஓட்டி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆட்டோவும் மீட்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்