காட்டில் வேட்டையாடாதீங்க- அட்வைஸ் சொன்ன பெண் வன அதிகாரிக்கு ஆபாச அர்ச்சனை..! வையம்பட்டியில் மதுபோதையில் ரகளை செய்த இருவர் கைது !
மணப்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வேட்டையாடுவதில் ஈடுபடக் கூடாது என வனச்சரகர் மேரி லென்ஸி தலைமையிலான வனத்துறையினர், வையம்பட்டி பகுதியில் எச்சரிக்கை செய்து, துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் அங்கு வந்த புதுமணியாரம்பட்டியைச் சேர்ந்த வீராசாமி மகன் சக்திவேல் (33) மற்றும் சக்கம்பட்டி சவரிமுத்து மகன் மச்சக்காளை (எ) ஆரோக்கியசாமி (49) ஆகியோர் வனச்சரகரிடம் தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்டனராம். இதுதொடர்பாக வனச்சரகர் அளித்த புகாரின்பேரில், வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேல், ஆரோக்கியசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Comments are closed.