திருச்சி மேற்கு மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (02-09-2024) காலை திருச்சியில் நடக்கிறது. இதுதொடர்பாக திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி ( மேற்கு) மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாநகர அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ் திருமண மண்டபத்தில்
நாளை 2-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி முன்னிலை வகித்து பேசுகிறார். கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு கழகப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகரக் கழக நிர்வாகிகள், பகுதி , வட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.