திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியில் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் அங்கமான டி.ஆர்.பி.பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் , கூகுள் நிறுவன மென்பொருள் பொறியாளர் ஆர்ச்சி ரதி ஆகியோர் பங்கேற்றனர். கோபிநாத் பேசும்போது, பொறுப்புகளை மாணவர்கள் தவிர்க்காமல் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு உள்ள கற்றல் சார்ந்த சிக்கல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார். மற்றொரு சிறப்பு விருந்தினர் ஆர்ச்சி ரதி, பொறியியல் துறையில் மாணவர்கள் எவ்வாறு வெற்றியடைய வேண்டும் என்றும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் உரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர். பி. கணேஷ் பாபு, திருச்சி எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் இயக்குனர் மால்முருகன் ஆகியோரும் பேசினர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.