திருச்சி திருவானைக்காவல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
