Rock Fort Times
Online News

தீபாவளி திருடர்களுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் “ஸ்கெட்ச்”- 24 மணி நேரமும் போலீஸ் படை கண்காணிப்பு…!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் இன்று(28-10-2024) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர், கொள்ளிடம், சமயபுரம், முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீருடை இல்லாமல் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சந்தேகப் படும்படியான நபர்களை பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக மாவட்ட காவல் அலுவலக உதவி மையத்தில் உள்ள  94874 64651 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம்.  தீபாவளி பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்பவர்கள் மேற்கண்ட எண்ணிற்கு தகவல் அனுப்பி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 24 ஆய்வாளர்கள், 45 உதவி ஆய்வாளர்கள்,  500 சட்டம்- ஒழுங்கு காவலர்கள் மற்றும் 50 ஆயுதப்படை காவலர்களை நியமித்து தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகிறோம்.  பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில்  போக்குவரத்தை சீர்படுத்த 100 போக்குவரத்து காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்