சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை முன்னின்று நடத்திய திருச்சி எஸ்.பி. வருண்குமார்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் செந்தில்குமார் (வயது 52). இவர், பணியில் இருந்த போது பெட்டவாய்த்தலை அருகே காவல்காரன் பாளையம் பகுதியில் தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில்குமார் துவாக்குடி, அண்ணா வளைவு பகுதியில் வசித்து வந்தார். இறந்த செந்தில்குமார் இறுதிச் சடங்கு துவாக்குடி பகுதியில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கலந்து கொண்டு,செந்தில் குமாரின் இறுதி சடங்கை முன்னின்று நடத்தினார். மேலும், செந்தில்குமார் குடும்பத்தினருக்கு ரூ. 25 ஆயிரம் தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கினார். சாலை விபத்தில் உயிரிழந்த செந்தில்குமாருக்கு ரேவதி என்கிற மனைவியும், அபிராமி (24), மோகனப்பிரியா (17) ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
Comments are closed.