கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞா் அணி சாா்பில் பேச்சுப்போட்டி…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார்...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான பேச்சுப்போட்டி பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞா் பன்னீர்செல்வன் வரவேற்றார். மாவட்ட மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் தினகரன், எம்.பன்னீர்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு செயலாளர் கிரிராஜன் எம்.பி, மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மாநகர வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கண்ணன், சதாசிவம் ,செந்தில், ஜெயசித்ரா, ராஜலிங்கம், செந்தில்குமார், முனீஸ்வரன் ,ஜெகதீஸ்வரன் ,சுமதி, பிரபாகரன் ,கிருஷ்ணா, ராமச்சந்திரன்,வண்ணை அரங்கநாதன், மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் அ.த.த.செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, குணசேகரன், நூர்கான், ஆறு.சந்திரமோகன், பொன்.செல்லையா ,சரோஜினி பகுதி செயலாளர்கள் இ.எம்.தர்மராஜ் ,மணிவேல், மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.