சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் இன்று(30-12-2024) அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மணப்பாறையில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ராதேவி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி.கார்த்திக், ராவணன், நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், வக்கீல்கள் அழகர்சாமி, முருகன் இளைஞரணி சண்முக பிரபாகரன் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Comments are closed.