திருச்சி மத்திய மாவட்டம், மேற்கு தொகுதி பொன்னகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கருமண்டபத்தில் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் இன்று (03-09-2024) நடந்தது.
கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, மேற்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, அந்தோணி சாமி, தொ.மு.ச. துணைப்பொதுச் செயலாளர் குணசேகரன், கவுன்சிலர்கள் மஞ்சுளா பாலசுப்பிரமணியன், ராமதாஸ், புஷ்பராஜ், வட்டச் செயலாளர்கள் தனசேகர், பி.ஆர்.பாலசுப்பிரமணியன், மூவேந்திரன், பந்தல் எஸ்.ராமு, தீரன் நகர் ஜெய்சங்கர், நிர்வாகிகள் பவுன்ராஜ், மோகன், பரமசிவம், முத்துப்பழனி, முன்னாள் கவுன்சிலர் கவிதா மாணிக்கம், வக்கீல் ஷீலா, சதீஷ்குமார், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- நடைபெறவுள்ள தி.மு.க முப்பெரும் விழாவை திருச்சி மாநகரத்தின் சார்பாகவும், பகுதி, வட்ட கழகங்களின் சார்பாகவும் வார்டுகளில் கொடி கம்பங்களை புதுப்பித்து கொடியேற்றி சிறப்பாக கொண்டாடுவது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை திருச்சி மேற்கு மாநகர தி.மு.க அனைத்து அணிகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது.
*நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கும்,திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வது. 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் வேண்டுகோளின்படி 200 தொகுதிகளில் வெற்றி பெற இப்போதிலிருந்து கழக முதன்மை
செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியினை தொடங்கி மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு பாடுபடுவது. திமுக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.