Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…! * கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் நல்லுசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி .பரமசிவம், அவைத்தலைவர் அய்யப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, வாசுதேவன், கலிலுல்ரகுமான், ரோஜர் மற்றும் இளைஞரணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, ஐ.டி.பிரிவு வெங்கட்பிரபு, தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாசறை லோகநாதன், கலைப்பிரிவு ஜான் எட்வர்ட்குமார், சிறுபான்மை பிரிவு தென்னூர் அப்பாஸ், பேரவை துணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், இளைஞரணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், கலை பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், தில்லை விஷ்வா, ஆண்டாள் தெரு சந்தோஷ்ராஜ், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், கௌசல்யா, ஜெயராமன், ரமணிலால் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்திட அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் அல்லும், பகலும் அயராது பாடுபடுவது. பொய் வாக்குறுதி கொடுத்து, கடன் சுமையை ஏற்றிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பது. மே 12-ந் தேதி எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்