Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழா: பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது…!

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு காாத்திகை தீபத் திருவிழா இன்று(13-12-2024) சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக மாலை 5 மணியளவில் செவ்வந்தி விநாயகா், தாயுமான சுவாமி, மட்டுவாா் குழலம்மை உற்சவ மூா்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையாா் சன்னதிக்கு முன்புள்ள கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக உச்சிப்பிள்ளையாா் சன்னதிக்கு முன்பு சுமாா் 40-அடி உயரமான கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தில் 5-அடி உயர செப்புக் கொப்பரையில் 300 மீட்டா் அளவுள்ள பருத்தித் துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டா் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகிவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா,அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்