Rock Fort Times
Online News

திருச்சி : குடும்ப தகராறில் கணவன் துாக்குபோட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது.இவா்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. சரவணன் குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் குடும்ப தகராறு ஏற்பட்டு கணவன் ,மனைவி இருவரும் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் அம்பிகாபரத்தில் இருக்கும் தன் மனைவியிடம்  சரவணன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த சரவணன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம், சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்