Rock Fort Times
Online News

திருச்சி: மருத்துவமனை தூய்மை பணியாளர் தற்கொலை…

திருச்சி பொன்மலை கணேசபுரம் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாலி (வயது 49). இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஈஸ்வரி, மகன் மகளுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு சென்ற வாலி, குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.இதனால், மன வருத்தத்தோடு ஊர் திரும்பிய அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரர் ஜெயகோபி பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்