Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மண்டல பொறுப்பாளர் வக்கீல் லெட்சுமணன் தலைமையிலும், மாவட்டத் தலைவர், முன்னாள் கவுன்சிலர் சிந்தாமணி செந்தில்நாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன், பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திருச்சியில் அடுத்த மாதம் (மார்ச்) 3ம் தேதி நடக்கும் மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், வழக்கறிஞர்கள் கிருபாகரன், பிரபாகரன், கார்த்திகேயன், சுப்ரமணி, சுகன்யா, சிக்கல் சண்முகம், கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வது. வருகின்ற 03-03-2024 அன்று திருச்சியில் நடைபெறும் வழக்கறிஞர்கள் மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்