சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய திருச்சி கலெக்டர் எம்.பிரதீப்குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “பசுமை விருது” வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், வனத்துறை மற்றும் காதி அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Comments are closed.